என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சாத்தான்குளம் ஒன்றியத்தில் 100 பெண்களுக்கு வெள்ளாடுகள்-ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார்
Byமாலை மலர்30 May 2022 8:56 AM GMT (Updated: 30 May 2022 8:56 AM GMT)
சாத்தான்குளம் ஒன்றியத்தில் 100 பெண்களுக்கு வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் கால்நடை மருத்துவமனை அலுவலகத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பெண்களை தொழில் முனைவராக்கும் நோக்கில் ஏழ்மை நிலையிலுள்ள விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் பெண்களுக்கு தலா 5 வெள்ளாடுகள் வீதம் 100 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சாத்தான்குளம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி தலைமை தாங்கினார். தாசில்தார் தங்கையா, மாவட்ட ஆவின் சேர்மன் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் கோட்ட கால்நடை பராமரிப்பு உதவி இயக்குநர் மருத்துவர் செல்வக்குமார் வரவேற்றார்.
சாத்தான்குளம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஜோசப், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் திட்டத்தை விளக்கி பேசினர். இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பெண்களுக்கு தலா 5 வெள்ளாடுகள் வீதம் 100 பேருக்கு 500 வெள்ளாடுகள் வழங்கி பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X