என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீடு புகுந்து பிளஸ்-2 மாணவியை கடத்தி மதுராந்தகம் கோவிலில் திருமணம் செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்30 May 2022 7:44 AM GMT (Updated: 30 May 2022 7:44 AM GMT)
சென்னை அரும்பாக்கத்தில் வீடுபுகுந்து பிளஸ்-2 மாணவியை கடத்தி மதுராந்தகம் கோவிலில் திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
போரூர்:
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (20). தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்தார்.
கடந்த 21-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற பிரவீன் திருமணம் செய்து வைக்கும்படி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.
இதையடுத்து பெற்றோர் முன்னிலையிலேயே மாணவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி பிரவீன் கடத்தி சென்று விட்டார். இதையடுத்து தனது மகளை வீடு புகுந்து கடத்தி சென்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீனை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது பிரவீன் தனது காதலியை அவரது சொந்த ஊரான மதுராந்தகத்திற்கு கடத்தி சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து இருப்பது தெரியவந்தது.
மேலும் அங்குள்ள உறவினர் வீட்டில் மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (20). தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்தார்.
கடந்த 21-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற பிரவீன் திருமணம் செய்து வைக்கும்படி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.
இதையடுத்து பெற்றோர் முன்னிலையிலேயே மாணவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி பிரவீன் கடத்தி சென்று விட்டார். இதையடுத்து தனது மகளை வீடு புகுந்து கடத்தி சென்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீனை தீவிரமாக தேடி வந்தனர்.
அப்போது பிரவீன் தனது காதலியை அவரது சொந்த ஊரான மதுராந்தகத்திற்கு கடத்தி சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து இருப்பது தெரியவந்தது.
மேலும் அங்குள்ள உறவினர் வீட்டில் மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X