search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நானோ யூரியா திரவம் இலவசமாக வழங்கினர்.
    X
    நானோ யூரியா திரவம் இலவசமாக வழங்கினர்.

    நானோ யூரியா திரவம் இலவசமாக வழங்கல்

    ஆர்பி அரசு நிர்வாக குழுமம் சார்பில் வலங்கைமானில் 100 பேருக்கு நானோ யூரியா திரவம் வழங்கப்பட்டது.
    நீடாமங்கலம்:

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உலகின் முதல் நானோ யூரியா (நானோ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட) ஆலையை தொடங்கி வைத்து நேற்று சிறப்புரை ஆற்றினார்.
     
    அந்த நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஆர்பி அரசு நிர்வாக குழுமம்  சார்பில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம்சார்பில் 500மி.லி., அளவிலான, ரூ.240 மதிப்புள்ள நானோ யூரியா திரவம் இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுமார் 100 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் யூரியாவிற்கும் நானோ யூரியா விற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பதை இஃப்கோ  நிறுவன மேலாளர் சந்தோஷ்குமார் விவசாயிகளிடையே விளக்கினார்.

    இதில் ஆர்பி அரசு நிறுவனர் விஜயராகவன், பா லகிருஷ்ணன் மற்றும் விவசாய தொழில் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். இது விவசாய தொழில் புரிவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் கருத்து ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×