search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கடலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் மரணம்

    அடையாளம் தெரியாத வாகனம் மோதி லாரி டிரைவர் உயிரிழந்தது தொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் முதுநகர் அருகே குடிகாடு பகுதியில் நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

    தகவல் அறிந்த கடலூர் துறைமுகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த வாலிபரின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனைத் தொடர்ந்து கடலூர் துறைமுகம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தை சேர்ந்த கணபதி என்றும் செங்கல்பட்டு பகுதியில் லாரி ஓட்டுனராக வேலைக்கு சென்றது தெரியவந்தது.

    ஆனால் நேற்றிரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து உள்ளார். இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×