search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    கல்லூரி மாணவி 4 பேர் மாயம்

    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் விருதுநகர் கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    விருதுநகர்

    சாத்தூர் சின்ன காமன் பட்டியைச் சேர்ந்தவர் கற்பகம். இவரது மகள் மேட்ட மலையில் உள்ள பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் திடீரென மாயமானார். சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம் பட்டியைச் சேர்ந்தவர் பரலோக தாஸ். இவரது மூத்த மகள் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்து வருகிறார். 

    சம்பவத்தன்று கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கூமாபட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடியை சேர்ந்த வர் மனோஜ்குமார் (21).  இவர் விருதுநகர் அருகே  ஆமத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மார்க்கெ ட்டிங் செல்வதாக கூறி விட்டு சென்ற மனோஜ் குமார் அதன் பின்னர் எங்கு சென்றார்? என தெரிய வில்லை. 

    பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்து அவரது சகோதரர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நரிக்குடி அருகே உள்ள நல்லுக்குறிச்சி சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் (வயது 21). சம்பவத்தன்று இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை வீரசோழன் போலீசில் புகார் செய்துள்ளார்.
     
    அதில், எனது மகன் கீழசெம்பூரை சேர்ந்த  இளம் பெண்ணுடன் மாயமானது தெரிய வந்துள்ளது. எனவே எனது மகனை மீட்டு தருமாறு தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×