search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகாரிகள் ஆய்வு
    X
    அதிகாரிகள் ஆய்வு

    ஊட்டி கோட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகள்- அதிகாரிகள் ஆய்வு

    நெடுஞ்சாலைதுறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.
    மஞ்சூர்:

     ஊட்டி கோட்டத்தில் சாலை மேம்பாட்டு பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைதுறை கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

    நெடுஞ்சாலைதுறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் உள் தணிக்கை செய்ய வேண்டும் என நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார். 

    இதன்படி நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான உள் தணிக்கை நடவடிக்கைகள் துவக்கப் பட்டுள்ளது. இதற்காக  நபார்டு மற்றும் கிராம சாலைகள் சேலம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையில் கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர் அசோகன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், அரவிந்த் ஆகியோர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    இக்குழுவினர் ஊட்டி கோட்டம் குந்தா பிரிவுகுட்பட்ட எம்.பாலாடா-பி.மணியட்டி வழி கல்லக்கொரைஹடா-காந்திநகர் பகுதிகளில் சாலையின் நீளம், அகலம், கனம், தார் கலவை தரம், காங்கிரீட் தடுப்புசுவர், மற்றும் வடிகால் பணிகளின் தரம் குறித்து ஆய்வு மற்றும் உள் தணிக்கை மேற்கொண்டார்கள். 

    ஆய்வின்போது நெடுஞ்சாலைதுறை இளநிலை பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் பெருமாள் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடன் இருந்தனர். 

    இந்த குழுவினர் குன்னூர் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தைச் சேர்ந்த லவ்டேல் கேத்தி அச்சனக்கல் கெரடா சாலையிலும் சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.  
    Next Story
    ×