search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    ஊட்டியில் பலத்த மழை

    கோடை சீசன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக தூறல் மழை பெய்து வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக தூறல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று நண்பகல் சுமாா் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ெரயில்வே பாலத்தின் அடியில் மழை நீா் தேங்கியதால் அதில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இதனால், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×