என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பொள்ளாச்சி அருகே விபத்து-விவசாயி பரிதாப சாவு
இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டுபாளையம் கடை வீதியை சேர்ந்தவர் பத்ரன் (வயது 65). விவசாயி. இவரது மனைவி திம்மக்காள் (60). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் திப்பம்பட்டி பெட்ரோல் பங்க் அருேக சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பத்ரன் பரிதாபமாக இறந்தார். திம்மக்காள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






