என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தி.மு.க. சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது அ.தி.மு.க. குற்றச்சாட்டு
Byமாலை மலர்26 May 2022 8:44 AM GMT (Updated: 26 May 2022 8:44 AM GMT)
தி.மு.க. சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது என்று அ.தி.மு.க. குற்றச்சாட்டியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலையை திறக்க பா.ஜனதாவை சேர்ந்த வெங்கய்யா நாயுடுவை அழைத்துள்ளனர்.
அதேநேரத்தில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, பா.ஜனதாவை ஓட, ஓட விரட்டுவோம் என பேசியுள்ளார். கருணாநிதி சிலையை திறக்க வெங்கய்யா நாயுடுவை அழைத்ததை கைவிட வேண்டும். அல்லது பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து பேசிய திருச்சி சிவா மீது தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்தமாதம் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இதில் பா.ஜனதா தலைவர்களை அழைத்திருந்தனர். ஆனால் எந்த பா.ஜனதா தலைவர்களும் திறப்பு விழாவில் பங்கேற்க–வில்லை.
மத்திய அரசை எதிர்ப்பது, திட்டங்களை விமர்சிப்பது என தி.மு.க. ஒருபுறமும், மறுபுறம் அவர்களை வைத்தே சிலை திறக்க அழைப்பது என நாடகமாடுகின்ற னர். இந்த சந்தர்ப்ப வாதத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ராஜீவ் கொலையாளி பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இது வேதனைப்படுத்துவதாக புதுவை காங்கிரஸ் தலைவர்கள் நாராயணசாமி, வைத்திலிங்கம், ஏ.வி.சுப்பிரமணியன் ஆகியோர் கூறினர்.
பேரறிவாளன் விடுதலை நாளை கறுப்புதினமாக அனுசரித்தனர். தற்போது மின்துறை தனியார்மயத்தை எதிர்த்து கூட்டணி கட்சிகளோடு இணைந்து போராடப்போவதாக சொல்கின்றனர். இந்த போராட்டத்தில் எப்படி மற்ற கட்சியினரோடு காங்கிரசார் ஒன்றாக பங்கேற்பார்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X