என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இந்திய கம்யூனிஸ்டு போராட்டம்
Byமாலை மலர்26 May 2022 8:38 AM GMT (Updated: 26 May 2022 8:38 AM GMT)
அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரக் கோரி குடிசை மாற்று வாரியம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாவாணர் நகர் கிளை சார்பில் குடிசை மாற்று வாரியம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிளை செயலாளர் சிந்தாமணி, உழவர்கரை தொகுதி செயலாளர் அன்பழகன், துணை செயலாளர் நளவேந்தன் தலைமை வகித்தனர். ஞானவேல், அஞ்சலிதேவி, பாண்டியன் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, தொகுதிக்குழு உறுப்பினர் தேவசகாயம் கண்டன உரையாற்றினர்.
பாவாணர் நகரில் 40 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட அடிப்படை வசதியற்ற அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும். குடிசைமாற்றுவாரிய இடத்தில் குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்தும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் விஜயலட்சுமி, திருமுருகன், வீரப்பன், காமாட்சி, மாரியப்பன், கிருஷ்ணவேணி, கருப்பாயியம்மாள், பஞ்சநாதன், நீலாவதி, நாகராஜ், சுசிலா, ஆனந்தி, சாந்தி, மகாராணி, வள்ளியம்மை, ஜெயலட்சுமி, தனலட்சுமி, கணேசன், அஞ்சலை, தாமோதரன், பூங்காவனம், காசியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X