search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியசாமி சிலைக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலு
    X
    பெரியசாமி சிலைக்கு அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலு

    தூத்துக்குடியில் பெரியசாமி சிலைக்கு அமைச்சர்கள்- மேயர் மலர் தூவி அஞ்சலி

    தூத்துக்குடி தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தி.மு.க. முன்னாள் மாவட்ட செய லாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான  பெரியசாமியின் 5-ம்  ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போல்பேட்டையில் அமைந்துள்ள மணி மண்டபத்திலுள்ள அவரது சிலைக்கு பெரியசாமியின் மனைவி எபனேசர், வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் மீனவளம் மற்றும் கால்நடைதுறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கன்டேயன், சண்முகையா, பொதுக்குழு உறுப்பினரும், மேயருமான ஜெகன் பெரியசாமி, ராஜா பெரியசாமி, அசோக்பெரியசாமி, அவரது மருமகன்கள் ஜீவன்ஜேக்கப், சுதன்கீலர், மகள்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

     பின்னர் அசைவ உணவு பொதுமக்களுக்கு சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வழங்கினார்கள்.
    மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், செந்தூர்மணி, ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர் பிரதீப், 

    மாவட்ட மாணவரணி துணைச் செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான வக்கீல் பால குருசாமி,  பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி அஜய்கோஷ், தொ.மு.ச. நிர்வாகிகள் முருகன், மரியதாஸ், கருப்பசாமி, சற்குணம், மின்வாரிய நிர்வாகிகள் பேச்சிமுத்து, லிங்கராஜ், அண்ணாநகர் பகுதி துணைச்செயலாளர் பாலு, வட்டச்செயலாளர்கள்  நாராயணன், ராஜா, டென்சிங், சேகர், முனியசாமி, கீதாசெல்வமாரியப்பன், ரவீந்திரன், அரசு வக்கீல் மாலாதேவி, மற்றும் சுப்பையா, சுடலைமணி, பிரபாகர், கருணா, மணி, அல்பர்ட், மகேஸ்வரன்சிங், உள்பட பலர் மரியாதை செலுத்தினார்கள்.

    39-வது வார்டு தி.மு.க. சார்பில் வட்டச்செயலாளர் கீதாசெல்வமாரியப்பன் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட பெரியசாமி படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி பொங்கலிட்டு நலத்திட்ட உதவிகளை பகுதி செயலாளரும் மாநகராட்சி சுகாதாரகுழு தலைவருமான சுரேஷ்குமார், வட்டச்செயலாளர் கீதாசெல்வமாரியப்பன், மாவட்ட பிரதிநிதி சக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள். அவைத்தலைவர் கணேச பாண்டியன், வட்டப்பிரதிநிதிகள் கார்த்திக், பொன்ராஜ், செல்வக்குமார், இளங்கோ அழகன், இளைஞர் அணி விக்னேஷ், மைதீன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தெற்கு மாவட்ட சார்பில் தி.மு.க. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாவட்ட துணைச் செயலாளர் செந்தூர்மணி தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ரூபன், அவைத்தலைவர் அருணாச்சலம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் அம்பாசங்கர்,  உள்பட பலர் மரியாதை செய்தனர்.

    காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் துணைத்தலைவர் பிரபாகரன், கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, மற்றும் பலர் மரியாதை செலுத்தினார்கள்.
    ம.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளரும் கோவில்பட்டி நகர்மன்ற துணைத்தலைவருமான ரமேஷ், மாவட்ட இளைஞர்அணி செயலாளர் விநாயகரமேஷ், மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன், மாநகர செயலாளர் முருகபூபதி உள்பட பலர் மரியாதை செய்தனர்.
    Next Story
    ×