search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய நிர்வாகிகள் பதவி பிரமாணத்தை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    X
    புதிய நிர்வாகிகள் பதவி பிரமாணத்தை தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    7 ஆண்டுகளுக்கு பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு

    7 ஆண்டுகளுக்கு பிறகு புதிய நிர்வாகிகள் தேர்வு சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் புகழ்பெற்ற பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறும். 

    இந்த விழாவை 7 ஆண்டுகளுக்கு முன்பு தர்கா ஹக்தர்களால் தேர்வு செய்யப்படும் நிர்வாக குழு நடத்தி வந்தனர். இடையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக நிர்வாகிகள் தேர்வு செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் கோர்ட்டு மூலம் கமிஷனர் நியமிக்கப்பட்டு அவருடைய மேற்பார்வையில் சந்தனக்கூடு திருவிழா நடந்து வந்தது. 

    தற்போது பக்தர்கள்   ஒன்றிணைந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இதனால் 7 ஆண்டுகளாக நடந்த இழுபறிக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள். புதிய நிர்வாகிகள் தலைமையில் வருகிற 28-ந் தேதி ஹக்தார்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையின் 2022-ம் ஆண்டு புதியதலைவராக பாக்கிர் சுல்தான் லெவ்வை, செயலாளராக சிராஜுதீன் லெவ்வை, உதவி தலைவராக சாதிக் பாட்ஷா லெவ்வை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 

    நிர்வாகக்குழு உறுப்பினர்களாக முதல் கிளையில் செய்யது சிராஜுதீன், செய்யது இப்ராஹீம் சோட்டை எஸ் பாதுஷா, ஹுஸைன், செய்யது இஸ்ஹாக்அபுல் ஹஸன், முர்சல் இபுறாஹீம் ஆலிம், 2-ம் கிளை பாக்கிர் சுல்தான், சுல்தான் செய்யது இப்ராஹீம், சாதிகுல் ஆமீன், அப்துல் கனி, கலில் ரஹ்மான், செய்யது இபுராஹிம்அமிர் ஹம்ஸா,3-ம் கிளை சித்திக்லெவ்வை, அப்துல் ரஹீம், அம்ஜத் ஹுஸைன், சாதிக் பாட்சா லெவ்வை, கனி லெவ்வை, செய்யது அபூதாஹிர், செய்யது இஸ்ஹாக் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
    Next Story
    ×