என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது
Byமாலை மலர்25 May 2022 9:38 AM GMT (Updated: 25 May 2022 9:38 AM GMT)
6 வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம் பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் உள்ளன.
பொள்ளாச்சி:
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இங்கு உள்ள 6 வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம் பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் உள்ளன. இந்த வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று அட்டகட்டி பயிற்சி மையத்தில் நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது. 25, 26, 27-ந் தேதிகளில் பெரிய தாவர உண்ணிகள் ஆன யானை, காட்டு மாடு உள்ளிட்ட வன உயிரினங்கள் கணக்கெடுக்கப்படுகிறது.
வனப்பகுதிக்குள் குழுக்களாக செல்லும் வனத்துறையினர் குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று நேரில் தென்படும் உயிரினங்கள் அவற்றின் எச்சம், கால் தடங்கள் போன்றவற்றை கணக்கெடுப்பு செய்கின்றனர்.
28,29,30 ஆகிய தேதிகளில் நேர்கோட்டுப் பாதை கணக்கெடுப்பு முறையில் தாவர வகைகள், மனித இடர்பாடு மாமிச உண்ணிகள் பெரிய தாவரங்கள் பிணம் தின்னி கழுகுகள் போன்றவற்றை கணக்கெடுப்பு செய்கின்ற னர். 31-ந் தேதி வன உயிரின பயிற்சி மையம் அட்டகட்டி தாங்கள் பதிவு செய்த கணக்கெடுப்பு தகவல்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு செய்கின்றனர். இன்று தொடங்கியுள்ள வனவிலங்குகள் கண க்கெடுப்பு பணி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X