என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்25 May 2022 9:23 AM GMT (Updated: 25 May 2022 9:23 AM GMT)
சீர்காழியில் சீமானை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:
முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சீர்காழியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரியகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லெட்சுமனன், வட்டார தலைவர்கள் பாலகுரு, பாலசுப்பிரமணியன், ஞானசம்பந்தம், மாவட்ட நிர்வாகி விஆர்ஏ.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது சீமான் உருவ பொம்மையை காங்கிரசார் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர்.
அங்கு பாதுகாப்புக்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து உருவ பொம்மையை கைப்பற்றி அப்புறப்படுத்தி தூக்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் புதிய பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X