search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    X
    காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

    சீர்காழியில் சீமானை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சீர்காழி:

    முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சீர்காழியில் இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரியகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

     காங்கிரஸ் கட்சி நகர தலைவர் லெட்சுமனன், வட்டார தலைவர்கள் பாலகுரு, பாலசுப்பிரமணியன், ஞானசம்பந்தம், மாவட்ட நிர்வாகி விஆர்ஏ.அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது சீமான் உருவ பொம்மையை காங்கிரசார் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றனர். 

    அங்கு பாதுகாப்புக்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தடுத்து உருவ பொம்மையை கைப்பற்றி அப்புறப்படுத்தி தூக்கிச் சென்றனர். இந்த சம்பவத்தால் புதிய பஸ் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×