search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    X
    ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    ஆலய ஆண்டு விழா

    நாகை அருகே புனித அந்தோணியார் ஆலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் பழைமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.

     இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியே–ற்றத்துடன் தொடங்கியது. 

    முன்னதாக கொடி ஊர்வலம் ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக, மீண்டும் ஆலயத்தினை வந்தடைந்தது.

    தமிழக ஆயர் பேரவை செயலாளர் சகாயராஜ் தலைமையில் சிறப்புத் திருப்பலி செய்து வைத்தார். தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு, ஆலயத்தின் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 

    திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அதனை தொடர்ந்து வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து முடி சூடுவிழா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார பெரிய தேர்பவனி வரும் 4-ம் தேதி நடைபெறுகிறது.
     
    இந்நிகழ்ச்சியில் கருங்கண்ணி பங்குத்தந்தை சபரிமுத்து, வேளாங்கண்ணி பேராலய உதவிப் பங்குத்தந்தை டேவிட் தனராஜ், மற்றும் நிகழ்ச்சிகளை கருங்கண்ணி கிறிஸ்தவ சமுதாய பெருந்தலைவர் பிரான்சிஸ், துணைதலைவர், விக்டர் பவுல்ராஜ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர்.

    Next Story
    ×