search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    பள்ளிப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டர் மயங்கி விழுந்து பலி

    பள்ளிப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டர் மயங்கி விழுந்து பலியானார்.
    பள்ளிப்பாளையம்:

    ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் லோகுசாமி (வயது 58). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

    பள்ளிப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.பி. காலனியில்  ஈரோடு  செல்லும் வழித்தடத்தில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.  இந்த  அரசு பஸ்சில் லோகுசாமி  நேற்று பணியில் இருந்தார். பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டு, பஸ்சிலேயே மயங்கி விழுந்தார். 

    அவர் உயிருக்கு போராடிக் கொணடிருந்தார். இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து டிரைவர், உடனடியாக பஸ்சை வேகமாக  வழியில் எங்கும் நிறுத்தாமல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையை நோக்கி ஓட்டிச் சென்று  சிகிச்சைக்காக  அவரை  சேர்த்தார்.   

    அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் லோகுசாமி இறந்து  விட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் இது பற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.   
    Next Story
    ×