என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவாரூர் அருங்காட்சியக காப்பாச்சியர் மருதுபாண்டியன் சிலையை ஆய்வு செய்தார்.
கண்டெடுக்கப்பட்ட சிலைகள் ஆய்வு
வலங்கைமான் அருகே வீடு கட்டுவதற்குகாக குழி தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட சிலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் கடந்த 19-ம் தேதி வீடு கட்டுவதற்கு குழி தோண்டியபோது சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.
அச்சிலைகள் வட்டாட்சியர் அலுவல–கத்தில் பதிவரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் அச்சிலைகளை திருவாரூர் அருங்காட்சியக காப்பாச்சியர் மருதுபாண்டி–யன் ஆய்வு செய்தார்.
ஆய்வில் இச்சிலைகள் அணைத்தும் ஐம்பொன்னால் ஆனவை என்றும், 3 அடி உயரத்தில் 65 கிலோ எடையுள்ள சமயகுறவர்களில் ஒருவரான சுந்தரர் சிலையும், சின்ன சின்னதாய் ஒரு தன்வந்திரி சிலை, ஒரு இராமானுஜர் சிலை, ஒரு பூமா தேவி சிலை, ஒரு ஸ்ரீ தேவி சிலை மற்றும் 1அடி உயரமுள்ள பெருமாள் சிலையும் கிடைத்துள்ளது.
இச்சிலைகள் வைணவ மதத்தை சேர்ந்தவை ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். உடன் வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்னன் ,மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story