என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    அரிசி வியாபாரி கைதான தம்பி
    X
    அரிசி வியாபாரி கைதான தம்பி

    தம்பி மனைவியை உல்லாசத்துக்கு அழைத்ததால் அரிசி வியாபாரி வெட்டி கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கைதான தம்பி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
    கோவை,
    தேனி மாவட்டம் சிறாப்பாறையை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 37). 
    இவர் கோவை அருகே உள்ள வேலந்தாவளம்  பாலாஜி நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து அரிசி வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 22-ந் தேதி அரிசி குேடானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

     இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதனை கொலை செய்த அவரது பெரியப்பா மகன்  மதுரையை சேர்ந்த முருகன் (36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-எனது சொந்த ஊர் தேனி மாவட்டம் சிறாப்பாறை. நான் மதுரையில்  குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகிறேன். 

    கடந்த  2 வாரத்திற்கு முன்பு எனது அண்ணன்  ராமநாதன்,  எங்களது சொந்த ஊரான சிறாப்பாறைக்கு வந்திருந்தார். 
    அப்போது அவர்  எனது மனைவியை அவரது  ஆசைக்கு இணங்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இது குறித்து எனது மனைவி என்னிடம் கூறினார். இதனையடுத்து நானும் , எங்களது உறவினர்களும் சேர்ந்து ராமநாதனை எச்சரித்து அங்கு இருந்து அனுப்பி வைத்ேதாம். 

    அதன் பின்னர்  அங்கிருந்து வேலந்தாவளம் வந்த ராமநாதன், செல்போன் மூலம்  எனது மனைவியை அடிக்கடி தொடர்பு கொண்டு  உல்லாசமாக இருக்க வருமாறு  அழைப்பு விடுத்துள்ளார்.

    இது குறித்து எனது மனைவி என்னிடம் கூறி கதறி அழுதார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கேட்பதற்காக நான்  நேற்று முன்தினம் காலை  கோவைக்கு வந்தேன்.   
    பின்னர் எனது அண்ணன் அரிசி குடோன் உள்ள தம்பா கவுண்ட ன்பாளையத்துக்கு சென்றேன். அப்போது ராமநாதன்  அங்கு வந்தார்.  அவரிடம் இது குறித்து  கேட்டேன்.  அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து  அவரை வெட்டி கொலை செய்தேன். இதில் அவர் சம்பவஇடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் நான் அங்கு இருந்து தப்பிச் சென்றேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்.
    இவ்வாறு அவர் கூறினார். விசாரணை முடிந்ததும் போலீசார் முருகனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    Next Story
    ×