search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் ரெயில் நிலையத்தில் முதல் நடைமேடையை விரிவாக்க பயணிகள் சேவை குழு அறிவுறுத்தல்

    ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த குழாயில் குடிநீரை சேவை குழுவினர் குடித்து பார்த்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு புதுடெல்லியில் இருந்து ரெயில் பயணிகள் சேவை குழு உறுப்பினர்களான ரவிச்சந்திரன், கோட்டலா உமாராணி, நிர்மலா கிஷோர் போலினா, அபிஜித் தாஸ், திலிப்குமார் மாலிக், கைலாஷ் லட்மண் வர்மா ஆகியோர் வந்தனர்.

    இந்த குழுவினர் திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை, கழிவறை, பயணிகள் காத்திருப்பு அறை, உணவகங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம், விலை ஆகியவற்றை ஆய்வு செய்தனர். நடைமேடையில் உள்ள மேற்கூரை, மின் விளக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த குழாயில் குடிநீரை குடித்து பார்த்தனர்.

    அதுபோல் ரெயில் நிலையத்தில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா?, வைபை வசதிகள், நிறைகுறைகள் என்ன என்பது குறித்து ரெயில் பயணிகளிடம் கேட்டறிந்தனர். பயணிகளின் தேவைகளை குறிப்பெடுத்துக்கொண்டனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள குறைகளை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். காத்திருப்பு அறையில் இருந்த கழிவறையை சுத்தமாக பராமரிக்க அறிவுறுத்தினார்கள்.

    ரெயில் நிற்கும்போது பெட்டிகளின் எண் குறித்த அறிவிப்பு பலகை நடைமேடையில் பொருத்த அறிவுறுத்தினார்கள். 1-வது நடைமேடை மிகவும் குறுகலாக இருப்பதால், அதை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள குழுவினர் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது சேலம் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் அரிகிருஷ்ணன், பொறியாளர்கள், நிலைய அதிகாரிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×