search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

    ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    சிவகங்கை


    சிவகங்கை  சுப்பிரமணியராஜா தெருவை சேர்ந்த  பொன்னாண்டி மகன் கருப்பையா. இவரது வீட்டில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் 3 வருடத்திற்கு ரூ. 3 லட்சம் கொடுத்து ஒத்திக்கு குடியிருந்து வந்தார். 

    ஒத்தி காலம் முடிவடைந்தவுடன் வீட்டின் உரிமையாளரிடம் ஆசிரியை பணத்தை கேட்டபோது ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என வீட்டின் உரிமையாளர் கூறினார். 

    இதை ஏற்க மறுத்த ஆசிரியையை வேல் கம்பால் கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து ஆசிரியை அளித்த புகாரின் பேரில் சிவகங்கை டவுன் போலீசார்  வழக்குப்பதிவு செயது விசாரணை நடத்தினர். 

    கொலை மிரட்டல் விடுத்த  கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×