search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க நகர பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?

    திருப்பூரில் பெண்கள் அதிக அளவில் பணிக்கு செல்கின்றனர்.

    திருப்பூர்:

    போக்குவரத்துத் துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்துக்காக நிர்பயா பாதுகாப்பான நகரத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் 500 பஸ்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பஸ்களிலும் 3 கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. பஸ் பயணத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையின்போது, அவசர அழைப்பு பொத்தானை அழுத்தி, அந்நிகழ்வுகளை பதிவு செய்யலாம்.

    அப்போது எழுப்பப்படும் ஒலியால் செயலியை இயக்குபவர் நிலைமையை கண்காணித்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஆவன செய்வார். இதற்காக கட்டளை மையம், காவல்துறை மற்றும் மாநகராட்சியின் அவசரகால பதில் மையத்துடன் இணைக்கப்படும்.

    திருப்பூரில் பெண்கள் அதிக அளவில் பணிக்கு செல்கின்றனர். பின்னலாடை நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் பஸ்களில் பலர் செல்கி ன்றனர். இருப்பினும் அனைவருக்கும் இது சாத்தியமாவதில்லை. எனவே பெண்கள் பலர் நகர பஸ்களைத்தான் பயன்படுத்துகின்றனர். சென்னையில் கொண்டுவரப்பட்டுள்ள திட்டம் நடைமுறையில் எந்த அளவுக்கு உதவும் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

    அதைப் பொறுத்துதான் திருப்பூரிலும் இத்தகைய திட்டத்தை கொண்டுவர முடியும். பெண்களுக்கு பாதுகாப்பான நகராக திருப்பூர் இருக்கிறது. இருப்பினும் இரவு நேரங்களில்பணியை முடித்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பெண்கள் பலர் பயத்துடன்தான் செல்ல வேண்டியிருக்கிறது. பெண்களுக்கு தக்க பாதுகாப்பு அவசியமானது. எனவே திருப்பூரில் இயங்கும் நகர பஸ்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் மற்றும் அவசர பொத்தான்கள் பொருத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    Next Story
    ×