என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு
Byமாலை மலர்20 May 2022 9:58 AM GMT (Updated: 20 May 2022 9:58 AM GMT)
மருங்குளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் மருங்குளத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் சம்பந்தமாக விதை தளைகள் உற்பத்தி, மண்புழு உரம் தயார் செய்யப்பட்டு பாக்கெட் போடும் பணிகள் மற்றும் பழ மரக்கன்றுகள் உற்பத்தி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை இந்த திட்டத்தின் சிறப்பு கண்காணிப்பாளரும் குடுமியான்மலை தோட்டக்கலை பயிற்சி நிலைய துணை இயக்குனருமான அன்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறும்போது:-
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 23-ந் தேதி (திங்கள் கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கி வைக்க உள்ளார். இதனை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்றார்.
இந்த ஆய்வின் போது தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முத்தமிழ்செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X