என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
2½ டன் பாலித்தீன் பைகள், டம்ளர்கள் பறிமுதல் - மேயர் தினேஷ்குமார் ஆய்வு
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நேற்று 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட எம்.ஜி.புதூர், காமாட்சியம்மன் கோவில் வீதி, ஜம்மனை வீதி ஆகிய பகுதிகளில் சுகாதார அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 2 கடைகள் மற்றும் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், ஒருமுறை பயன்படுத்தும் டம்ளர்கள் மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர்.
ஜம்மனை வீதியில் உள்ள கடைக்கு அருகே இருந்த குடோனில் இருந்து 2½ டன் எடையுள்ள பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோல் 2 கடைகளில் இருந்து 1 டன் பாலித்தீன் பைகள், டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், டம்ளர்களை மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டார். பாலித்தீன் பைகள், டம்ளர்களை வாங்கி விற்பனை செய்யவோ, மக்கள் பயன்படுத்தவோ கூடாது என்று தெரிவித்தார். மண்டல தலைவர் கோவிந்தராஜ் உடனிருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்