என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    2 பேர் விஷம் குடித்து தற்கொலை

    2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாட்டக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் (61). மது பழக்கத்துக்கு அடிமையான இவரை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த முத்துராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

    விருதுநகர் அருகே உள்ள வி.சுந்தரலிங்காபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி (47). சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் பெருமாள்சாமி கால் முறிந்து ஆபரேசன் செய்யப்பட்டது. ஆனால் இயல்பு நிலைக்கு திரும்ப முடியவில்லை. இதில் விரக்தியடைந்த பெருமாள்சாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
    Next Story
    ×