என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்17 May 2022 12:43 PM GMT (Updated: 17 May 2022 12:43 PM GMT)
சிவகங்ைகயில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை
சிவகங்கை ஒன்றியத்திற்கு உட்பட்ட சத்துணவு ஊழியர்களை தரக்குறைவாக ஒருமையில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலரின் விரோதப் போக்கினை கண்டித்தும், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை கண்டித்தும் சத்துணவு ஊழியர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையாளராகப் பணிபுரிபவர் தொடர்ச்சியாக, ஊழியர் விரோதப்போக்குடன் செயல்படுகிறார்.
ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய நியாயமான கோரிக்கைகளை மறுத்தும், ஒருமையில் பேசியும், அவமானப்படுத்தி வரும் ஆணையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X