என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    திருவள்ளூர் அருகே லாரி மோதி முதியவர் பலி

    திருவள்ளூர் அருகே லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மேல்நல்லாத்தூர் சாலையில் நேற்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அந்த வழியாக அவருக்கு பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதை கண்ட லாரி டிரைவர் வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றார். இந்த விபத்தில் இறந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரியவில்லை.

    இதுகுறித்து மேல்நல்லாத்தூர் வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×