search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இறந்து கிடக்கும் மாடுகள்.
    X
    இறந்து கிடக்கும் மாடுகள்.

    வெள்ளகோவிலில் மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் பலி

    நேற்றுதோட்டத்தில் மேலே சென்று கொண்டிருந்த இரும்பு மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் பாய்ந்துள்ளது.
    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தில் விசாலாட்சி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் அவர் தனது பசுமாடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். நேற்று தோட்டத்தில் மேலே சென்று கொண்டிருந்த இரும்பு மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.

    அது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் பாய்ந்துள்ளது. இதில் சிக்கி 4 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து விசாலாட்சி அளித்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த 4 பசுக்களின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் ஆகும். 
    Next Story
    ×