என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் மாயம்

    விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் மாயமாகினர்.
    விருதுநகர்

    தெலுங்கானா மாநில த்தை சேர்ந்தவர் சாயா ரெட்டி. இவரது மகன் பரணிதர ரெட்டி இவர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரது கடந்த சில வாரங்களாக செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. 

    இதனால் பதட்டமடைந்த சாயா ரெட்டி கிருஷ்ணன் கோவிலில் உள்ள கல்லூரி விடுதிக்கு நேரில் வந்து விசாரித்தபோது பரணிதர ரெட்டி கடந்த 3-ம் தேதி விடுதியை காலி செய்து விட்டு சென்றதாக தெரி வித்தனர்.

    இந்நிலையில் சாயா ரெட்டி செல்போனுக்கு மகன் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அதில் தான் நல்ல வேலையில் இருப்பதாகவும், தேட வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் மகன் மாயம் குறித்து சாயா ரெட்டி கிருஷ்ணன்கோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி பள்ளப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் கதிரேசன் (25). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்த 7 பவுன் நகையை வங்கியில் அடகு வைத்து அதன் மூலம் கிடைத்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணத்துடன் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

    இதுகுறித்து அவரது தந்தை முத்து கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் மாயமான வாலிபரை தேடி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள குல்லூர்சந்தையை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது மகள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று காதல னுடன் மதுரைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு அந்தப்பெண் சென்றார். ஆனால் அவர் காதலனுடன் செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள மேல சின்னையா புரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி‌. இவரது மகள் பி.காம் முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அந்தப் பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து வச்சகாரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×