என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் கல்லூரி மாணவி மாயம்
Byமாலை மலர்13 May 2022 9:56 AM GMT (Updated: 13 May 2022 9:56 AM GMT)
ஈரோட்டில கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன்.
ஈரோடு:
ஈரோட்டில கல்லூரி மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன்.
ஈரோடு ராசாம்பாளையம் முத்துமணி நகரை சேர்ந்த வர் குமார். இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் மகாலட்சுமி (17).
இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மகாலட்சுமி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
வீட்டில் டி.வி. பார்த்து கொண்டு இருந்த மகாலட்சுமி திடீரென காணவில்லை.
வெளியே சென்று இருந்த அவரது தாய் சசிகலா வீட்டுக்கு வந்து பார்த்த போது அங்கு மகாலட்சுமி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் மகாலட்சுமி குறித்து எந்த தகவலும் கிடக்கவில்லை.
இது குறித்து சசிகலா ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மனைவி ஜீவிதா (20). கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் கணவன்- மனைக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து கணவருடன் கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள அவரது தாய் செல்வி வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை.
அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து செல்வி வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி அருகே உள்ள கருங்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன்.
இவரது மனைவி லட்சுமணன். இவர்களது மகள் தீபிகா (17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த தீபிகா திடீரென காணவில்லை.
அக்கம் பக்கம் தேடி பார்த்தும் உறவினர்களிடம் விசாரித்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து லட்சுமணன் கொடுமுடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அடுத்த கம்புளியம்பட்டியை சேர்ந்தவர் சம்பத், இவரது மனைவி சித்ரா.
இவர்களது மகள் கவுரி மாலா (18). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த கவுரிமாலா திடீரென மாயமாகி விட்டார்.
அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தும் அவர் கிடைக்க வில்லை.
இது குறித்து சித்ரா பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X