search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேசன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

    கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை 14ந் தேதி காலை 10 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் மேல் ஒட்டிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ஆதவபாக்கம், வாலாஜாபாத் வட்டத்தில் அவளூர், திருப்பெரும்புதூர் வட்டத்தில் சோகண்டி, குன்றத்தூர் வட்டத்தில் வடக்குப்பட்டு ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    மேற்கண்ட கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு, மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

    மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.

    மேற்படி, முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்திடவும் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×