search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    வண்டலூர் அருகே 13வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு

    வண்டலூர் அருகே 13வது மாடியில் இருந்து விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரி. ஜி.எஸ்.டி. சாலையில் 14 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

    இங்கு பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஓம் சாகர் சந்தோ(வயது19) என்பவர் நண்பர்களுடன் தங்கி இருந்தார். அவர் 4வது மாடியில் தங்கி இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து மாணவர் ஓம் சாகர் சந்தோ திடீரென கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான ஓம் சாகர் சந்தோ 13வது மாடிக்கு எதற்காக சென்றார்? அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாராவது தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×