என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காளியம்மன் கோவில் குண்டம் விழா
Byமாலை மலர்12 May 2022 9:44 AM GMT (Updated: 12 May 2022 9:44 AM GMT)
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடியிலுள்ள கரிய காளியம்மன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
பவானி:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடியிலுள்ள கரிய காளியம்மன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது.
கடந்த 26-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நேற்று முன்தினம் சக்தி அழைத்தல், புதுப்பாளையம் சென்று கருமலை ஆண்டவரை அழைத்து வருதல், குண்டம், பொங்கல் வைத்து குண்டம் தீ மூட்டுதல் போன்றவை நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து நேற்று புதன்கிழமை அன்று முப்போடு படைக்கலம் அழைத்தல், திருட்டு கருமலை ஆண்டவரை அழைத்து வருதல், குதிரை துலுக்கு பிடித்தல், செலம்பூரம்மனை அழைத்து வந்து குண்டம் இறங்குதல், எருமைக்கிடா வெட்டுதல், ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.
சுமார் 75 அடி நீள குண்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர், முன்னதாக கோவில் பூசாரி குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார்.
இன்று கம்பம் பிடுங்குதல், மஞ்சள் நீராடுதலுடற் திருவிழா நிறைவு பெருகின்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X