search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    மளிகை கடையில் திருட்டு

    பெருந்துறையில் மளிகை கடையில் திருட்டு போன சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெருந்துறை:

    பெருந்துறையில் மளிகை கடையில் திருட்டு போன சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு தண்ணீர்பந்தல் பகுதி சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47). 

    இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 

    அதிகாலை பக்கத்து கடைக்காரர் வீட்டிற்கு வந்து உங்கள் கடையின் பூட்டு உடைந்து, இரும்பு கதவு திறந்து உள்ளதாக கூறினார்.

     உடனடியாக சக்திவேல் கடைக்கு சென்று பார்த்த போது கதவு திறந்திருந்தது. 

    உள்ளே இருந்த 4 மூட்டை அரிசி மற்றும் ரூ.27 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. 

    இது தொடர்பாக வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார். 

    புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×