என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மளிகை கடையில் திருட்டு
Byமாலை மலர்12 May 2022 9:30 AM GMT (Updated: 12 May 2022 9:30 AM GMT)
பெருந்துறையில் மளிகை கடையில் திருட்டு போன சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறையில் மளிகை கடையில் திருட்டு போன சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு தண்ணீர்பந்தல் பகுதி சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47).
இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தனது கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதிகாலை பக்கத்து கடைக்காரர் வீட்டிற்கு வந்து உங்கள் கடையின் பூட்டு உடைந்து, இரும்பு கதவு திறந்து உள்ளதாக கூறினார்.
உடனடியாக சக்திவேல் கடைக்கு சென்று பார்த்த போது கதவு திறந்திருந்தது.
உள்ளே இருந்த 4 மூட்டை அரிசி மற்றும் ரூ.27 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X