search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

    சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை

    மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள 16 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்த மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி மாநகர தெற்கு துணை கமிஷனர் தங்கதுரை மேற்பார்வையில், உதவி கமிஷனர் அக்பர்கான் தலைமையில் தனிப்படை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அந்த சிறுமி நெல்லை மாவட்டம், பாபநாசத்தை சேர்நதவர் என்றும், 16 வயதுடைய அந்த சிறுமி 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தந்தை விட்டு சென்றதால் அவரது தாயார் சிறுமியை வளர்த்து வந்துள்ளார்.  குடும்ப சூழ்நிலை காரண மாக அண்ணன் மகன் விக்னேஷ்க்கு சிறுமியை குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    அதன்பின் அவர்கள் மதுரை  பைக்காரா மேட்டு தெருவில் வசித்து வந்துள்ள னர்.  விக்னேஷ், திருப்பூர் பனியன் கம்பெனி யில் வேலை பார்த்து வருகிறார். 
    இந்தநிலையில் அந்த சிறுமி கர்பபமாகி சிகிச்சை க்காக மதுரை  அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்ட போது மேற்கண்ட விபரங்கள் தெரியவந்தது.

    இதுகுறித்து  திருப்பர ங்குன்றம் யூனியன் சமூக நல அதிகாரி யோகம்மாள் இதுதொடர்பாக மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் சிறுமிக்கு திருமணம் செய்து வைத்ததாக விக்னேஷ், அவரது தாய், தந்தை மற்றும் மாமியார் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து ர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    Next Story
    ×