search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    வாலிபர்கள் மாயம்

    மதுரையில் இருவேறு சம்பவங்களில் 2 வாலிபர்கள் மாயமானார்கள்.
    மதுரை

    மதுரை நேதாஜி ரோடு கிளாஸ்காரத்தெரு, குறுக்குச்சந்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் தங்கராஜ் (வயது 42). கடந்த 4-ந் தேதி வெளியே சென்ற இவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. 

    பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து தங்கராஜின் மனைவி சுபஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜா என்ற கருப்பு (வயது 33). ஓட்டல் ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 2-ந் தேதி அதிகாலை திருப்பூர் சென்று வருவதாக கூறிச் சென்ற ராஜா அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. 

    அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மனைவி காருண்யா கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×