search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    கடலூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் திடீர் மாயம்

    கடலூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் திடீரென மாயமானது குறித்து கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி செல்லஞ்சேரி சேர்ந்தவர் பர்குணம் (வயது 32). இவரது மனைவி பிரக்தி ( 24). இவர்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களுக்கு அட்சயா என்ற பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 5 மாதத்திற்கு முன்பு பிரக்தி தனது கணவர் பர்குணம் மீது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை தொடர்பாக புகார் அளித்தார்.

    அப்போது போலீசார் விசாரணை நடத்தியதில் கணவர் பர்குணம் மீது எந்தவித தவறும் இல்லை என கூறி புகார் அளித்த பிரக்தியை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பிரக்தி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மேலும் பிரக்தியை எங்கு தெரியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசில் கணவர் பர்குணம், எனது மாமியாரின் தூண்டுதலின் பேரில் எனது மனைவி பிரக்தி காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் பிரக்தியை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×