என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேசிய அளவில் சிறப்பாக செயல்புரிந்த 12 ஊராட்சிகளுக்கு மத்திய அரசின் விருது: மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்- மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர்
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் மூன்றடுக்கு ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருதுகளை திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக்கும்; ஊராட்சி ஒன்றியங்களான விருதுகள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மண்டபம் ஊராட்சி ஒன்றியம்; கிராம ஊராட்சிகளான விருதுகள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அக்கரைப்பட்டி கிராம ஊராட்சி, கரூர் மாவட்டம், கரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த மண்மங்கலம் கிராம ஊராட்சி, மதுரை மாவட்டம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த சின்னப்பட்டி கிராம ஊராட்சி, கன்னியாகுமரி மாவட்டம், ராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த அத்திக்காட்டுவிளை கிராம ஊராட்சி, கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த கங்கலேரி கிராம ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம், கரம்பகுடி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த கட்டாத்தி கிராம ஊராட்சி ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த கிராம சபைக்கான தேசிய விருது ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் சாத்தனூர் கிராம ஊராட்சிக்கும்; கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டத்திற்கான (வி.பி.டி.பி.) தேசிய விருது சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த துவார் கிராம ஊராட்சிக்கும்; குழந்தைகள் நேய கிராம ஊராட்சிகான விருது நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தைச் சார்ந்த குஞ்சப்பனை கிராம ஊராட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் தேசிய விருது பெற்ற மாவட்ட ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி, இது போன்று சிறப்பாக செயல்பட்டு மேலும் பல விருதுகளைப் பெற வாழ்த்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்