search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் அங்காடி முன்பு திரண்ட கிராம மக்கள்
    X
    மகளிர் அங்காடி முன்பு திரண்ட கிராம மக்கள்

    பண்ருட்டி அருகே பரபரப்பு- கூட்டுறவு மகளிர் அங்காடி முன்பு திரண்ட கிராம மக்கள்

    திருத்துறையூரில் 2 தரப்பை சேர்ந்த கிராம மக்கள் மோதலையடுத்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சின்ன பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கம் சார்பில் திருத்துறையூரில் மகளிர் அங்காடி உள்ளது.

    இந்த மகளிர் அங்காடி மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த மகளிர் அங்காடி மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயலாளராக ஜெய கோபி என்பவர் இருந்து வருகிறார்.

    கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த மகளிர் அங்காடி அரசு ரேசன் கடையாக மாற்றி தர வேண்டும் என்று ஒரு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், பண்ருட்டி வட்ட வழங்கல் அலுவலர் மோகன், மற்றும் கூட்டுறவு அலுவலர்கள் இன்று திருத்துறையூர் கிராமத்திற்கு நேரில் வருகை தந்து மகளிர் அங்காடியில் பொதுமக்களிடம் விசாரித்தனர்

    இதனைத் தொடர்ந்து திருத்துறையூர் 2 தரப்பை சேர்ந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது.

    தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
    Next Story
    ×