என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவமனை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Byமாலை மலர்10 May 2022 8:57 AM GMT (Updated: 10 May 2022 11:01 AM GMT)
சென்னையில் ஒவ்வொறு வார்டுக்கு ஒரு மருத்துவமனை என்ற அடிப்படையில் 200 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தாயகம் கவி, திரு.வி.க. நகர் தொகுதியில் மருத்துவமனை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், புதிதாக நகர்புறங்களில் 708 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் சமீபத்தில் பேரவை விதி 110கீழ் அறிவித்தார்.
அதன்படி சென்னையில் ஒவ்வொறு வார்டுக்கு ஒரு மருத்துவமனை என்ற அடிப்படையில் 200 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெரிய மருத்துவமனைக்கு மக்கள் அதிக அளவில் வருவதை தவிர்க முடியும் என்று விளக்கம் அளித்தார்.
மேலும், மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4000 பணியிடங்களை நிரப்பும் பணிகள் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X