என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி தற்கொலை
    X
    மூதாட்டி தற்கொலை

    மாமல்லபுரம் அருகே 70 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

    மாமல்லபுரம் அருகே 70 வயது மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியை சேர்ந்தவர் சொக்கம்மாள் (வயது 70). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். சொக்கம்மாள் மகனுடன் வசித்து வந்தார். கீழே விழுந்ததில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. 

    இதனால் வலியால் அவதிப்பட்டு வந்த சொக்கம்மாள் திடீரென மண் எண்ணை்னையை உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×