என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    கிருஷ்ணகிரி வழியாக திருப்பத்தூருக்கு கடத்திய ரூ.4.21 லட்சம் குட்கா, கார் பறிமுதல் ஒருவர் கைது

    கிருஷ்ணகிரி வழியாக திருப்பத்தூருக்கு கடத்திய ரூ.4.21 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி, 

    கர்நாடாகா மாநிலம் பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக வெளியூருக்கு குட்கா கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
    இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், எஸ்ஐ. சிவசந்தர் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி & சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்டேகுப்பம் கூட் ரோடு அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை நோக்கி சென்ற கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மொத்தம் 505 கிலோ இருந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 608 ஆகும். 

    அந்த புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்தி சென்ற திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள மல்லகுண்டா பகுதியை சேர்ந்த தங்கராஜ்(39) என்பவரை கைது செய்தனர். 

    மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்ட திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த பகுதியை சேர்ந்த பூவரசன், மணி, குருவி என்கிற சிங்காரவேலன், அரசு என்கிற அரசகுமார் மற்றும் 20 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கைதான தங்கராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து திருப்பத்தூருக்கு குட்காவை கடத்தி சென்றது தெரிய வந்தது. போலீசார் கைதான தங்கராஜிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.
    Next Story
    ×