என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
சிவகிரியில் 2 புலிக்குட்டிகள் நடமாட்டம்?
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கொல்லன்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட தாண்டாம்பாளையம் உயர்நிலைப்பள்ளி அருகே கடந்த சில நாட்களாக புலி நடமாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள கொல்லன்கோவில் பேரூராட்சிக்குட்பட்ட தாண்டாம்பாளையம் உயர்நிலைப்பள்ளி அருகே கடந்த சில நாட்களாக புலி நடமாடி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
சிலர் புலி நடமாடுவது வதந்தி என்றும் எனவே யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த 2 பெண்கள் மொபட்டில் சென்றனர். அப்போது அவர்களை 2 புலிக்குட்டிகள் துரத்தியுள்ளது.
இதனால் அவர்கள் அச்சமடை்நது அங்கிருந்து சென்றனர். பின்னர் இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியது. குட்டிகள் நடமாடுவதால் தாய் புலியும் பதுங்கி இருக்கலாம் என்று பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் தெரிந்ததும் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொது மக்களிடம் விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் புலியின் கால்தடம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
புலியின் நடமாட்டம் இருப்பது உறுதியானால் இந்த பகுதியில் கூண்டு வைத்து புலியை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.
Next Story






