என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
ஈரோட்டில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோட்டில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு திண்டல் வெட்டுக்காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). இவரது மனைவி பத்மாவதி (31). செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பத்மாவதி சேலத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதையடுத்து செந்தில்குமார் தூக்கு மாட்டுவதுபோல் வீடியோ எடுத்து பத்மாவதிக்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து பத்மாவதி அலறி அடித்துக்கொண்டு ஈரோட்டுக்கு வந்தார்.
இதற்கிடையே கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பத்மாவதி கோபித்துக் கொண்டு சேலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு மீண்டும் சென்று விட்டார்.
சம்பவத்தன்று பத்மாவதியின் உறவினர் அவருக்கு போன் செய்தனர். அப்போது செந்தில்குமார் வேலைக்கு செல்லவில்லை என்றும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு திறக்கவே இல்லை என்றும் கூறி உள்ளார்.
இதையடுத்து பத்மாவதி ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் அருகில் உள்ள வர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது செந்தில்குமார் தூக்கில் தொங்கி கொண்டிந்தார்.
உடனடியாக அவரை கீழே இறக்கி பார்த்தனர். அப்போது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தார். உடனே அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அப்போது செந்தில்குமாரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






