என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
அடையாளம் தெரியாத ஆண் பிணம்
அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
அடையாளம் தெரியாத ஆண் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சத்தியமங்கலம் பண்ணாரி ரோட்டில் சிக்கரசம்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி ராஜசேகர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் ரோந்து சென்றனர்.
அப்போது பண்ணாரி தெப்பகுளம் செல்லும் வழியில் வண்டிமுனியப்பன் கோவில் அருகே சுமார் 55 வயது மதிக்கதக்க ஒரு முதியவர் பிணமாக கிடந்தார்.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்ததனர்.
அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற எந்த தகவலும் கிடைக்க வில்லை. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சருகிறார்கள்.
Next Story






