
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சாமியார் தர்கா பகுதியை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி (வயது 45). இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.
நேற்று வீட்டில் இருந்த லட்சுமி மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த முருகன் தனது மனைவியை உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து முருகன் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து லட்சுமி என்ன ஆனார் எங்கு சென்றார். கடத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்.