search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    சென்னை விமான நிலையத்தில் சர்வதேச போதை கும்பலை சேர்ந்தவர் கைது

    சென்னை விமான நிலையத்தில் சர்வதேச போதை கும்பலை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மலேசிய நாட்டைச் சேர்ந்தவர் மஹதரன் (வயது 51). இவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    இவா் கா்நாடகா மாநிலத்தில் பதுங்கியிருந்து, போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வந்தார். கா்நாடகா மாநிலத்தின் மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசார், மஹதரனை கைது செய்ய தீவிரமாக தேடினா். ஆனால் அவா் வெளிநாடுகளில் தொடா்ந்து தலைமறைவாக இருந்துகொண்டு, போதை கடத்தலில் ஈடுபட்டாா்.

    கடந்த 2019ம் ஆண்டு மஹதரனை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தனா்.

    இந்த நிலையில் மலேசியாவில் இருந்து வந்த மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட், ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனா். அந்த விமானத்தில் மஹதரனும் சென்னை வந்தாா். அவருடைய பாஸ்போா்ட்டை சோதனை செய்த அதிகாரிகள், இவா் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும், தேடப்படும் கடத்தல் குற்றவாளி என்பதை கண்டறிந்தனர்.

    இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் பெங்களூரில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனா். இதையடுத்து பெங்களூர் போலீசாா் சென்னை விமானநிலையத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    Next Story
    ×