என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சித்திரை திருவிழா
Byமாலை மலர்5 May 2022 10:51 AM GMT (Updated: 5 May 2022 10:51 AM GMT)
சிவகாசி பத்திரகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
சிவகாசி
சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) சிவகாசி காளீஸ்வரி கல்லூரி மற்றும் காளீஸ்வரி இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு டெக்னாலஜி சார்பில் இரவு 7 மணிக்கு மேல்கடை கோவிலில் இருந்து அம்மன் கைலாச பர்வத வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடக்கிறது.
ரதவீதியில் வலம் வரும் சமயத்தில் கேரள பாரம்பரியமிக்க அர்த்தநாரீஸ்வரர் நர்த்தனம், ஸ்ரீவிநாயகர், பைரவி, தத்ரூப காட்சிகள் சிறப்பு ஒலி -ஒளியுடன் கூடிய அழகுரதங்கள் முன்செல்ல பத்ரகாளி அம்மன் நகர்வலம் விமரிசையாக நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்குமாறு காளீஸ்வரி நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் நிர்வாகத்தின் சார்பில் விஜய்டிவி சூப்பர் சிங்கர் புகழ் பரத் & ரக்சிதா பங்கேற்கும் லட்சுமணன் சுருதியின் பிரமாண்டமான இசைநிகழ்ச்சி இரவு 10 மணிக்கு சிவகாசி இந்துநாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X