என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் வழங்கினர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை வணிகவியல் துறையின் விரிவாக்கப்பணி சார்பில் சாட்சியாபுரம் எல்வின் மைய மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது.
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். எல்வின் மையத்தின் நிர்வாகி தயாளன் பர்னபாஸ், தலைமை ஆசிரியர் ஜோசப்தினகரன் ஆகியோர் பேசினர்.
சிறப்பு விருந்தினர்களாக 130 மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள், 25 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்கள் மற்றும் இளங்கலை வணிகவியல் துறை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதையடுத்து ரூ. 67 ஆயிரம் மதிப்புள்ள பலசரக்கு பொருட்கள், அரிசி, கோதுமை, இனிப்பு மற்றும் மதிய உணவுப்பொருட்களை காளீஸ்வரி கல்லூரி மாணவர்கள் வழங்கி மகிழ்ந்தனர்.
இளங்கலை வணிகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் சொர்னேஷ் வரவேற்றார். மாணவர் சரவணக்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை இளங்கலை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் விரிவாக்க பணி பொறுப்பாளர் பாபு பிராங்கிளின் செய்திருந்தார்.
Next Story






