என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இந்து பண்பாட்டை அழிக்கும் நோக்கத்துடன் மடாதிபதிகளை தி.மு.க அரசு மிரட்டி வருகிறது - இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு
Byமாலை மலர்5 May 2022 9:48 AM GMT (Updated: 5 May 2022 9:48 AM GMT)
இந்து பண்பாட்டை அழிக்கும் நோக்கத்துடன் மடாதிபதிகளை தி.மு.க அரசு மிரட்டி வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தரங்கம்பாடி:
இந்து முன்னணி அமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராஜ்குமார் தலைமை தாங்கினர். பாலாஜி, சீர்காழி சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணேஷ் வரவேற்றார். ஆசியுரை ஸ்ரீலஸ்ரீ மகாலிங்கம் பண்டார சன்னதி, சிறப்புஅழைப்பாளர்கள் திரைப்பட நடிகரும், சண்டை மாஸ்டருமான கனல் கண்ணன் கலந்து கொண்டனர்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது.
திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை திமுக அரசு இடித்துள்ளது. கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களுடைய ஆட்சி நடப்பது போல் மனப்பான்மையில் செயல்பட்டு வருகின்றனர். பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை இந்துக்கள் பண்பாட்டை அழிக்கும் நோக்கில் தமிழக அரசு தடை செய்துள்ளது. திமுக அரசு மடாதிபதிகளை மிரட்டி வருகிறது.இந்துக்களின் கலாச்சாரத்தை உடைக்க வெளிநாடுகளில் இருந்தும் சதி நடைபெறுகிறது என கூறினார்.
பா.ஜ கட்சியின் மாவட்ட செயலாளர் அகோரம், நாஞ்சில் பாலு, இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் நகர செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X