search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரியாணி விற்பனை செய்த ஓட்டலை படத்தில் காணலாம்.
    X
    பிரியாணி விற்பனை செய்த ஓட்டலை படத்தில் காணலாம்.

    ஓட்டலில் வாங்கிய பிரியாணி சாப்பிட்ட 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்

    கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று வேலை பார்ப்பவர்களுக்கு, வீட்டின் உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையிலிருந்து, 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டதும் கட்டிடத் தொழிலாளர்கள் 11 பேர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர்.

    இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த கட்டிட உரிமையாளர் சித்திரை வேல், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×